
(தஞ்சாவூர் கோவிலில் இருக்கும் வெட்டெலுத்து- இது கடரத்தின் பயணாத்தை குறிப்பிட்டிரிக்கும் பகுதியாகும்)
நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் இந்த தொடரை எழுதுகிறேன். இதற்கான தகவல்களை திரட்டும் பொருட்டு மேலும் பல விசயங்களை நான் அறிந்துக் கொள்ள முடிந்தது. இதற்கு நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
முதலாவதாக ‘Lembang Bujang’-கின் பூகோல அமைப்பை நாம் காணலாம். ‘Lembah Bujang’ எனப்படும் கடாரம் இராஜேந்திரச் சோழரின் மலாயாவின் ஆட்ச்சி இடமாக விளங்கியதாக கூறப் படுகிறது என்பது நாம் அறிந்த விசயம். இதன் அமைப்பு மூன்று நதிகளுக்கு அருகில் இருப்பது அக்காலத்தில் இதன் பெரும் வளர்ச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது. அந்த மூன்று நதிகளும் இன்று ‘சுங்ஙய் பூஜாங்’, ‘சுங்ஙய் மெர்போக்’, மற்றும் ‘சுங்ஙய் மூடா’ என அழைக்கப் படுகிறது.
இராஜேந்திரச் சோழர் கடாரத்தில் கால் பதித்த பொழுது இதன் அருகில் இருந்த அனைத்து இடங்களையும் கைபற்றி இருக்கிறார். அதில் Langkasuka, Srivijaya, Gangga Negara போன்ற அரசங்களும் அடங்கும். இதற்கான சான்றுகள் ‘Lembah Bujang’ மற்றும் Indonesia-வில் இருக்கும் பாலித்திவிகளில் மட்டுமே காணப் படுகிறது. இதற்கு காரணம் கடராம் இராஜெந்திரச் சோழரால் அழப்பட்ட சமயத்தில், இந்தோனேசியாவை சூரியவர்மன் ஆட்சி செய்திருக்கிறார். இந்த இரு அரசாங்கத்திற்கும் நல்லுரவு இருந்த போதிலும், இராஜேந்திரச் சோழரின் கப்பல்களுக்கு அதிகமான வரி விதிக்கப் பட்டதால் இவ்விரு அரசாங்கத்தினருக்கும் போர் நடந்ததாகவும் குறிப்பிட பட்டுள்ளது. இதன் பிறகு Sirivijaya அரசாங்கமும் இராஜெந்திரச் சோழரின் கீழ் அடிபணிந்திருக்கிறது.
‘Lembah Bujang’-கில் வினாயகர் மற்றும் அம்மன், இந்த இரு கோவில்களை இன்றளவும் காணலாம். இதன் சிறப்பு அம்சம் என்ன? சூரியன் உதிக்கும் சமயத்தில் சூரியக் கதிர்கள் வினாயகர் கோவிலிழும் மரையும் சமயத்தில் அம்மன் கோவிலிலும் பட்டு மறையும். இதை தவிர்து இன்றய கெடா(கடாரம்) மநிலத்தில் அதிகமான நெல் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இது இன்றைக்கு நேற்று நடந்த மாற்றமல்ல, தொன்று தொட்டு மக்களால் அமல் படுத்தப் பட்டுவரும் தொழிலாகும். கெடா மட்டுமின்றி தாய்லாந்திலும் அதிகமான நெல் வயல்களை காணலாம். இவையணைத்தும் இந்தியர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியமே என்பது என் கருத்து.

(‘Lembah Bujang’ பொருட்காட்ச்சி சாலையில் இருக்கும் வினாயகர் சிலை- பழங்கால சிற்பத்தின் அழகைக் காணலாம்)
-நன்றி-
–விக்னேஷ்–
இராஜெந்திரச் சோழரின் பயணம் தொடரும்………..

உங்கள் பதிவுகள் மூலம் பல அரிய விஷயங்களை தருகிறீர்கள்.
தொடருங்கள்.
//உங்கள் பதிவுகள் மூலம் பல அரிய விஷயங்களை தருகிறீர்கள். தொடருங்கள்.//
நன்றி நண்பரே!