Posted in நூல் நயம் on மாலைpMon, 28 Apr 2008 13:37:58 +000037திங்கட் கிழமை, 15 2008 | மறுமொழி இல்லை »
இது இத்தொடரின் கடைசிப் பதிவு.
முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2
(பொன்னியின் செல்வன்)
வானதி பொன்னியின் செல்வன் மேல் கொண்ட காதல்
சிறுபிராயத்திலேயே தாயை இழந்து , பின் தந்தையையும் சீக்கிரமே பறி கொடுத்துவிட்டு அன்புக்கு ஏங்கி நின்ற இந்த சிறு பெண்ணுக்கு, வாழ்வில் ஒரே பிடிப்பு என்பது தாய் பாசத்தையொத்த இளைய பிராட்டியின் அன்பு தான் … பருவம் வந்த பின்னும் கூட, குந்தவைக்கு அவள் குழந்தையாகவே தெரிந்தாள் …
ஆனால் வல்லிய விதியானது அவளையும் விட்டுவிடவில்லை … வந்தது ஒரு காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in நூல் நயம் on மாலைpSat, 26 Apr 2008 15:33:59 +000033சனிக்கிழமை, 15 2008 | 1 மறுமொழி »
முதல் பாகம் இங்கே சுட்டவும்
(வல்லவரையன் வந்தியத்தேவன்)
குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்
ஆனால் விதி யாரை விட்டது … எந்த நொடியில் அவள் வந்தியத்தேவனைச்சந்தித்தாளோ குடந்தை ஜோதிடர் வீட்டில்… அப்போது தான் அவள் “பெண்மை” பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால் அகன்று விரிந்த தன் பெரிய கண்களால் அப்படியே வந்தியதேவனை விழுங்கி விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும் தன்னையே இழக்கிறாள் … தன்னையும் அறியாமல் மெல்லிய இளம் காதல் துளிர் விடுவதை உணர்கிறாள் …
ஆனால் ஏதோ [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in நூல் நயம் on மாலைpFri, 25 Apr 2008 14:41:42 +000041வெள்ளிக்கிழமை, 15 2008 | 42 மறுமொழிகள் »
(முகப்பு அட்டை)
தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்
விபத்து என்பார்களே… அது இதுதானோ? … அதுவும் விபத்தின் முடிவு இன்பமானதாக இருந்துவிட்டால்? … அதுதான் நம் நாயகனுக்கு நேர்ந்தது… குடந்தை ஜோதிடர் வீட்டில் அவன் கண்டது என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே இல்லை … குந்தவையின் பொன்முகம் ஒன்றைத்தான் … ஆயிரம் காவியங்கள் புகழ்ந்து பாட ஒண்ணாத அவள் அழகிய திருமுக மண்டலத்தைத்தான் … அதுவரை அவனுக்குள் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in நூல் நயம் on மாலைpThu, 24 Apr 2008 17:26:31 +000026வியாழன், 15 2008 | 23 மறுமொழிகள் »
(முகப்பு அட்டை)
தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.
தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் [...]
முழு பதிவையும் வாசிக்க »