Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதியிலிருந்து 26-ஆம் திகதிவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மெழி மற்றும் உணவு பிரச்சனைகளை இந்த ஐந்து நாட்களுக்கு சமாளித்தாக வேண்டும். இக்கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். நேரம் இருந்தா வாங்களேன் சொன்று வரலாம்.

China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2008”

from  May 22, 2008 to  May 26, 2008

1. WHAT:

The fair is the Branch Fair of “China Hi-Tech Fair”, organized by “China Hi-Tech Transfer Center”.

China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2007

Review:

 

 

2. WHERE: The fair is in “Shenzhen Convention & Exhibition Center”.

Shenzhen is a beautiful city near Hong Kong, about 50 minutes by bus.

Three days (3 daytime and 2 nights) Hotel (four star hotel)  standard room in Shenzhen city .

Three days business set meals and a promotion reception for buyers and suppliers

Special bus to server the buyers during May 23 to May 25.

www.ECVV.com

Tel: 86 755 82468418

Fax: 86 755 82469377

Address:  10/F, Tower A, Bank of China Building, 5015 Caitian Road,

Futian District, Shenzhen, Guangdong Province, P. R. China

Post Code: 518026

 

 

 

தடுக்கி விழுகிரவள தாங்கிப்புடிச்சா love வருதுறா…. என்னக்கருமமோ…

 

 

இது இத்தொடரின் கடைசிப் பதிவு. 

முந்தய பதிவுகளை படிக்க இங்கே சுட்டவும் பகுதி1 பகுதி2                                                

                                                            (பொன்னியின் செல்வன்)

வானதி  பொன்னியின் செல்வன் மேல்  கொண்ட  காதல்

சிறுபிராயத்திலேயே  தாயை  இழந்து , பின்  தந்தையையும்  சீக்கிரமே  பறி  கொடுத்துவிட்டு  அன்புக்கு  ஏங்கி  நின்ற  இந்த  சிறு  பெண்ணுக்கு, வாழ்வில்  ஒரே  பிடிப்பு  என்பது  தாய்  பாசத்தையொத்த இளைய  பிராட்டியின்  அன்பு  தான் … பருவம்  வந்த  பின்னும்  கூட,  குந்தவைக்கு  அவள்  குழந்தையாகவே  தெரிந்தாள் … 

ஆனால்  வல்லிய  விதியானது  அவளையும்  விட்டுவிடவில்லை … வந்தது  ஒரு  காட்டுப் பூனையின் ரூபத்தில்…. பூனையோடு பொருந்த  (அதாவது சண்டையிட ….) யானை  மேல்  வந்தான்  ஒருவன் … வேடிக்கையாக  இல்லை ? ஆனால்  கேவலம்  பறவை  இனமென்று  பாகுபாடு  பாராமல் , அந்த  இளம்  குஞ்சுகளின்  உயிரைக் காத்த அந்த கருணைமிகு இதயம் … யாராக இருப்பன் அந்த  யானைப் பாகன்?  களங்கமில்லா  தூய  பால்  போன்ற  அவள்  மனதை  கொள்ளை  கொண்டவன்  யார் ? என்ற  எண்ணங்கள்  அவளுக்குள்  மீண்டும்  மீண்டும்  தோன்றி  அவளை  இன்பமாக  வதைத்தன …
 
வெளி  உலகம்  என்றால்  என்ன  என்பதையே  அறியாது , கொடும்பாளுர்  ஒன்றே உலகம்  என்று  வளர்ந்து  வந்த 
ஒரு  அறியாப்பெண்; காதல், களவு  போன்றவற்றை  கனவில்  கூட  எண்ணிப்பார்த்திராதவள் … அதனால் … கள்ளம் , கபடம் , கவலை  ஏதும்  இன்றி  மனம்  போல்  ஆடிப்பாடி , களிப்பில்  மூழ்கிக்  கிடந்தவளின்  உள்ளத்தில்  இப்போது  ஏதோ  ஒரு  பெரும்  மாற்றம் … மானைப்  போல  துள்ளிக்கொண்டு  திரிந்த  கால்களில்  இன்று  ஒரு  சிறிய  தயக்கம், தடுமாற்றம் … தோகை  விரித்தாடும்  மயிலைப்போல  வான  வெளியெங்கும்  சுதந்திரமாக  சுற்றி  வந்த  அவளின்  மனம்  இன்று  கூண்டில்  அடைபட்ட  கிளியாக  ஆகிவிட்டது  ஏன் ?
 
குளத்தில்  விழும்  கல்  தண்ணீரில்  வட்ட  வட்டமாய்  அழகிய  அலைகளை  எழச்செய்வது  போல் … அவளின்  உள்ளத்தடாகத்தில்  ஒரு  அழகிய  வீர  திருமுகம்  இன்ப  அலைகளை  எழுப்பி  விட்டிருக்கிறது …. அந்த   அனுபவம்  அவளுக்குப்புதிதாக  மற்றுமின்றி  புதிராகவும்  இருந்தது … புரியாத  சிலவற்றில்  தான்  போதையும் , ஈடுபாடும்  அதிகம்  உண்டாகும்  என்பது  உண்மையோ?  தான்  கொடும்பாளூர்  இளவரசி  என்று  அறிந்ததும்  அவன்  கோபம்கொண்டு விருட்டென்று   திரும்பிச் சென்றது  ஏன் ? மீண்டும்  சந்தித்தால்  அவன்  ஏன்  அவ்வாறு  கோபம்  கொண்டான்  என  கேட்கவேண்டும் … அந்த  யானைப்பாகனை  மறுபடியும்  காண  முடியுமா ? என்றெல்லாம்  அந்த  சிறுபெண்ணின்  உள்ளத்தில்  பலவிதமான  எண்ணங்கள்  அலை  மோதின …
 
ஆனால் …  அவன்தான்  இந்த  நாட்டு  மக்களின்  ஆத்மார்த்தமான  அன்புக்கு  உரியவன் … அரசற்கு  அரசர்களை  எல்லாம்  அடி  பணிய  வைக்கும்  அஞ்சா  நெஞ்சன் , வீரத்தில் , கருணையில் , அழகில்  இந்த  அகிலமே  போற்றும்  `அருள்  மொழி  வர்மன் ‘… என்ற  உண்மை  அவள்  உள்ளத்தில்  பேரிடியாக  இறங்கியது … நாடே  போற்றும்  இளவரசரை , கேவலம்  ஒரு  யானை  பாகன்  என்று  நினைத்தோமே ? இந்த  அரசே  அவனுடையது … அவனுக்கே  அரசாங்க  உத்யோகம்  வாங்கித்தருவதாக  சொன்னோமே … என்ன  வேடிக்கை , இல்லை .. மூடத்தனம் ? என்றெல்லாம்  அவள்  நினைத்து  உள்ளம்  கலங்கிக்கொண்டிருந்த வேளையில், அவன்  முன்னே  தீபம்  ஏந்தி  நின்று , அவனை  வாழ்த்தி , வெற்றி  மலை  சூட்டி  வழியனுப்ப  வேண்டும்  என்றால் ? …  

(வானதி)
 
தயக்கமும் , குற்ற  உணர்வும் , அவற்றோடு  பெண்களுக்கே  உரிய  இயற்கையான  அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பென்னும் நால்வகை  உணர்ச்சிகளும்  ஒருங்கே  உந்தித்தள்ள , அவன்  தன்னை  ஏறெடுத்துப்பார்த்த அந்த  நொடியில் , அவள்  தன்வசம் இழந்து  மூர்ச்சை  ஆகிச் சரிந்தாள் …  ஆனால் … இது  அபசகுனத்திற்கான   அறிகுறியல்ல … அவளை  அவன்  எப்போதும்  நினைவில்  வைத்திருக்க  தூண்டும்  நல்லதொரு  சந்தர்ப்பம்  என்பதையோ … அவனும் , இப்படி  ஒரு  விசித்திரப்பெண்ணை  முதன்  முதலில்  பார்த்ததைத்  தன்  ஆயுள்  முழுவதும்  மறக்கப் போவதில்லை  என்பதையோ …, பாவம் , அப்பேதை  அறியாள் … 

அவனை  ஒரு  வேலைக்காரன்  என்று  பரிகாசம்  செய்தது , அவன்  போர்க்களம்  போகும்  சமயத்தில் , விபத்து  போல்  தீபத்தை  தவற  விட்டது  என்பதையே  அவள்  மனம்  நினைத்து  கொண்டிருக்க … அந்த  நினைவுகளே  அவன்  மீது  அளப்பெரும் காதலாக  உருப்பெற்று  வளர்ந்து  வருவதை  அவள்  அறிந்திறாள் ….  இருந்தாலும் , அவனை  மணந்து  கொள்ள  இந்த  சோழ  நாட்டின்  ஒவ்வொரு  கன்னிப் பெண்ணும்  விரும்புவாள் … அதையே  தான்  செய்தால் … பட்டமகிஷி  ஆகும்  எண்ணத்திலேயே !!!  என்ற  ஏளனப்பேச்சும் வரும் … யானைப்  பாகனாகவே  அவன்  இருந்திருக்கக்கூடாதா ?… “நான்  அவனை  யானைப்பாகனாக  இருக்கும்போதே  விரும்பினேன் … அவன்  இளவரசனா  என்று  அப்போது  எனக்கு  தெரியாது … அதைப்பற்றிய கவலை அப்போது  அல்ல  எப்போதும்  எனக்கு  இல்லை , அவன்  அன்பு  ஒன்றே  ஏன்  பிறவியின்  பயன் , அவன்  இதயமே  எனக்கு  அரியாசனம் “… என்றெல்லாம்  அடிக்கடி  தனக்குத்தானே பேசிக்கொண்டு , தன்  காதலுக்கு  உரமேற்றி  வளர்த்துவந்தாள்  …. பிரதிபலன்  எதுவும்  எதிர்  பாராத  காதல்  தன்னுடையது  என்று  நிரூபிக்க  ஒரு  தருணம்  வாராதா  என்று  வாடி  வருந்திக்கொண்டிருந்தாள்  …
 
அத்தகையவனை …ஒரு  நாள்  கடல்  கொண்டு  விட்டது  !! என்ற  செய்தி  வந்தால்? … அதை  அவள்  காதுகள் கேட்டனவா ? இல்லை , அதற்கு  முன்னமே  அவள்  உயிர்  அவளிடத்தில்  இல்லை  என  அறிந்து  கொண்டாள் … இனி  யோசிக்க  என்ன  இருக்கிறது ? இந்த  உடம்பேனும்  கூட்டைப்பற்றி இனி  என்ன  கவலை ? அவனோடு  வானவெளியில்  நட்சத்திரமாக  ஜொலித்திருக்கவும் , சோலைத்தென்றலோடு  கூடவே  சேர்ந்து  வரும்  பூக்களின்  நறுமணம்  போல , அவன்  ஆவியோடு  சுற்றித்திரிந்திருக்கவும்  அவள்  தயாராகி  விட்டாள் … ஓடையில்  பாய்ந்து  தன்  உயிரை  விட்டுவிட  துணித்து  விட்டாள் … ஐயோ  பாவம் , … அது  கைகூடவில்லையே … தன்னைக் கரை ஏற்றிக்காப்பாற்றி, தன்  உள்ளம்  கவர்ந்தவனோடு  தன்னை  சேர விடாமல்  பிரித்தது  யார் என்று  தெரிந்து கொள்ள  அவள்  விரும்பாததில்  என்ன  ஆச்சரியம் ? ஆனால் …அவனை  கடல்  கொண்ட  செய்தி  உண்மையல்ல  என்று  அறிந்ததும்  உண்டான  இன்பத்துக்கு  அளவே  இல்லை … ஆஹா … ஒரு  நொடியில்  எவ்வளவு  பெரிய  தவறு  செய்ய  இருந்தோம்  என  எண்ணி  மகிழ்வதற்குள் … அவன்  இன்னொரு  பெண்ணை  நேசித்துக்கொண்டு  இருக்கலாம்  என்று  கேட்கும்  படி  நேர்ந்ததே … என்ன கொடுமை  !!! போகட்டும் … அவன்  யாரை  விரும்பினாலும் … என் காதல்  மாறாது … அவன்  உயிரைக்காத்த  பெண்ணை  அவன்  விரும்புவதில்  தவறு ஒன்றுமில்லை  …. ஆனாலும் , தான்  தன்  தூய  அன்பைக்காட்ட  ஒரு  வாய்ப்புக்கூட  கிடைக்கவில்லையே  என்று  எண்ணி  அவள்  இன்னும்  வேதனைப்பட்டாள்  …
 
அன்று  ஒரு  நாள் , காவிரித்தாய் , கரை  புரண்டு  பொங்கி  வந்த  தன்  அன்பினால் , அவளை குடந்தை  ஜோதிடர்  வீட்டுக்கூரையோடு  சேர்த்துக்கொண்டு  சென்ற  போதும்,  தன்  உயிரைப்பற்றிய  கவலை  சிறிதும்  அவளுக்கு  இல்லை … ஆனால் , தன்னை  மீட்க  வெள்ளத்தில்  குதித்த அந்த  ஓடக்காரப்பெண்ணை  தான்  காப்பாற்ற  வேண்டும் , அவள்  இளவரசருக்கு  செய்த  உதவிக்கு , பிரதி  உதவியாக  தான்  அவளைக்காப்பற்றியாக வேண்டும் , இளவரசரின்  மேல்  உள்ள  தன்  மெய்  அன்பை  நிரூபிக்க  இது  போல்  ஒரு  பொன்னான  தருணம்  என்றும்  அமையப்போவதில்லை  … அந்த  முயற்சியில்  தான்  இறக்க  நேரிட்டாலும் , மரணத்தை  மனமுவந்து  ஏற்றுக்கொள்ள வேண்டும் , அதை  இளவரசர்  உணரும்  போது  அவர் கண்களில் துளிர்க்கும் ஒரு  சொட்டு கண்ணீர் மட்டுமே  தனக்குப்போதும் … என்று  எண்ணியே  பூங்குழலியை  அவள்  முதலை  வாயினின்று  காப்பாற்றினாள்… 
  … 

ஆனால் அவள்  விஷயத்தில்  விதியின்  விளையாட்டுகள்  இனிதாகவே  இருந்தன …. தன்  மனம் கொண்ட நாயகனும்  தன்னை  நினைத்து  அல்லும்  பகலும்  மருகுகிறான்  என்று  அறிவதை  விட  ஒரு  இனிய  செய்தி  வேறு  என்ன  இருக்க  முடியும் ? அதை  அவன்  வாயினாலேயே  கேட்கும்  போது , அந்த  நொடிக்க்காகவே  தான் உயிர்  வாழ்ந்திருப்பதாக  அவள்  நினைப்பதில்  வியப்பொன்றும்  இல்லையே ? 

தன்  காதலன்  இறந்த  செய்தி  கேட்டு  தன்னுயிரை  விட்டுவிடத்துணிந்தவள் , தன் காதலனைக் காப்பாற்றியவளை தான்  காப்பாற்றி,  அவன் நன்றிக்கடனை  தீர்க்க  தன்  உயிரையும்  கொடுக்க  முன்வந்தவள், தன்  காதல்  அவன்  மீது  தானே  ஒழிய  அரியாசனத்தின்  மீதில்லை  என்ற  சபதத்தில்  இருந்து  வாழும்  வரை  வழுவாமல்  இருந்தவள் … அந்த  உத்தமியின்  காதல்  சாலச்சிறந்தது  என்பதில்  சந்தேகம் என்ன?  ….      

முற்றும்..

பொன்னியின் செல்வன் ஒரு அமுத சுரபியை போன்ற நாவல்… எழுதுவதற்கு இன்னும் நிறைய உள்ளன…

எ.கா: 1) மணிமேகலை வந்தியதேவன் மேல் கொண்ட காதல்

2) ஊமை ராணி சுந்தர சோழர் மேல் கொண்ட காதல்

3) பூங்குழலியின் காதல்

4) நந்தினியின் காதல்

இன்னும் நிறைய உள்ளன. காதலை தவிர்த்து மற்ற கண்ணோட்டதிலும் எழுதலாம்.

நன்றி.

 

  முதல் பாகம்   இங்கே சுட்டவும்                                                               

                                     (வல்லவரையன் வந்தியத்தேவன்)

குந்தவை வந்தியத்தேவன் மேல் கொண்ட காதல்
ஆனால்  விதி  யாரை  விட்டது … எந்த  நொடியில்  அவள்  வந்தியத்தேவனைச்சந்தித்தாளோ குடந்தை  ஜோதிடர்  வீட்டில்… அப்போது  தான்  அவள்  “பெண்மை”  பூத்ததை அவளே அறிகிறாள். வியப்பால்  அகன்று  விரிந்த  தன்  பெரிய  கண்களால் அப்படியே  வந்தியதேவனை விழுங்கி  விடுவதுபோல் பார்க்கிறாள் … அவனது களை ததும்பும் திருமுகத்தைக்கண்டதும்  தன்னையே இழக்கிறாள் … தன்னையும்  அறியாமல்  மெல்லிய  இளம்  காதல்  துளிர்  விடுவதை  உணர்கிறாள் …
 
ஆனால்  ஏதோ  ஒன்று  தடுக்கிறதே ? அது  என்ன ?… பாராளும்  மன்னன்  மகள் தான், அவனோ  ஒரு  வழிப்போக்கன்  அவ்வளவே … தங்கள் காதல் பொருத்தமானதா என்று  மனதுக்கும் , புத்திக்கும்  ஒரு  பெரும்  போராட்டம் அவளுக்குள்  தொடங்குகிறது ….
 
ஆனாலும்  மனமே  வெல்கிறது … தன்னுடைய  நிலையில்  இருந்து  அவள்  ஒரு போதும்  இறங்கி  வர  இயலாது … தனக்கு  இருக்கும்  பொறுப்புகளை அவள் தட்டிக்கழிக்க முடியாது … எல்லா  சாதரண  பெண்களையும் போல காதலனே  உலகம்…  என்று  அவனை  நினைப்பதையே  முழு  நேர  தொழிலாக (வானதி, மணிமேகலை மற்றும் பூங்குழலி போல்) அவள்  செய்ய  முடியாது … அதனால்  அவள்  காதலை  மறைத்து  வைக்க  முயல்கிறாள் … அதில்  ஓரளவு வெற்றியும்  பெறுகிறாள் … காதல்  வயப்பட்ட  தன்  மனதை  வந்தியத்தேவனிடம் பெரும்பாலும்  அவள்  வெளிக்காட்டிக்கொள்வதில்லை … ஆனால் , சரியான தருணங்களில் , அதை  அவள்  வெளியிட  தயங்கவும்  இல்லை … (சிறைச்சாலையில் , பொன்னியின் செல்வனுக்கு ஓலை  கொடுத்து  அனுப்பும்   போது , சின்னப்பழுவேட்டரயரை  தேடிச்சென்று திரும்பி வந்து  வந்தியத்தேவன் அவளை பார்க்கும்போது … )
                  
              (குந்தவை)
தான்  சோழ  நாட்டிலேயே  இருக்க  வேண்டும்  என்பதற்காக  அவள்  வந்தியத்தேவனைப்போல்  ஒரு அனாதையைக்காதலிக்கவில்லை … அவன்  தனக்கு  அடிமை  போல்  இருப்பான் என்று  அவனை  மணம்  செய்து  கொள்ள  விரும்பவில்லை … அவ்வளவு  சுயநலம் பிடித்தவளும் இல்லை  அவள் … ஆனால்  சோழ  நாட்டின்  மீது  கொண்ட  அன்பால்  அவள் கட்டுண்டு  கிடந்தாள் … அது  அவளே  அவளுக்கு  இட்டுக்கொண்ட  விலங்கு …
 
பெரிதாக பிரஸ்தாபித்தால்தான்  காதல்  உயர்ந்ததா  என்ன ? இது  இரு  ஜோடி  கண்களின்  மௌன  கீதம் … ஒரே  எண்ணம்  உடைய  இரு  மனங்களினின்று  எழும் இனிய  ராகம் … அவர்கள்  பேசிக்கொள்ளத்தேவை  இல்லை … அவர்களின்  மனங்கள் இணைந்து விட்டதை  அவர்கள்  இருவருமே  நன்கு  அறிவார்கள் … இது ஒரு மென்மையான, மேன்மையான காதல் ….
தொடரும்…

                                    

                                              

                                                        (முகப்பு அட்டை)

தலைப்பு: பொன்னியின் செல்வன்

ஆசிரியர்: கல்கி

நயம்: சரித்திர நாவல்

பதிப்பகம்: வானதி

                           வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்
விபத்து  என்பார்களே… அது  இதுதானோ? … அதுவும்  விபத்தின்  முடிவு  இன்பமானதாக  இருந்துவிட்டால்?  … அதுதான்  நம்  நாயகனுக்கு  நேர்ந்தது… குடந்தை  ஜோதிடர்  வீட்டில்  அவன்  கண்டது  என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே  இல்லை … குந்தவையின்  பொன்முகம்  ஒன்றைத்தான் … ஆயிரம்  காவியங்கள்  புகழ்ந்து  பாட  ஒண்ணாத  அவள்  அழகிய  திருமுக  மண்டலத்தைத்தான் … அதுவரை  அவனுக்குள்  இருந்த  இதயம்  வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு  சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று  கலந்தது…
 
அவள்  இளவரசியோ  அல்லது  சாதாரணபெண்ணோ, அந்த  நொடியில்  அவனுக்கு  அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த  வேளையில் அவன்  இளவரசியை  சந்திப்பதை  எதிர்பார்த்திருக்கவும்  வாய்ப்பில்லை …. எத்தனையோ  போர்க்களங்களில், அவன்  எதிரிகளின்  கூரிய உலோக வாட்கள் சாதிக்க  முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து  விட்டனவே !!!  அவனை  அடியோடு  சாய்த்து  விட்டனவே !!! இதுதான்  இயற்கையின்  இணையில்லா வலிமையோ… இதுதான்  இன்ப  விபத்து  என்றால், எத்தனை  முறை  வேண்டுமானாலும்  இந்த  விபத்தில்  சிக்கிக்கொள்ளலாமே … என்று  எண்ணுகிறான்  நம்  நாயகன்.
 
ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு  வந்த  அதே  தயக்கம், இன்னும்  அதிகமாகவே  அவனுக்குள்  எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள்  எல்லாம்  அடிபணிந்து  சேவகம்  செய்யக்கூடிய  “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை  மட்டும்  தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று  ஒரு  நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு  கூட  இல்லை…  இது  பொருந்துமா? நடக்குமா? உலகம்  தான்  ஏற்குமா? என்று  அவனும்  பலவாறு  சிந்திக்கிறான் … ஒரு  பெண்ணின்  கண்களுக்கு  உள்ள  சக்தியை  எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன்  அமைதியை இழக்கிறான் …  ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …
                                  
காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால்  அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா?  இல்லையா? என்ற கேள்விக்கான  விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன  செய்கிறோம்,  என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…
 
அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும்  தான் அவளை நேசிப்பதை  அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க  விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர்  இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான  சமய  சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….
 
காவலர்களிடம் இருந்து  தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின்  திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்? 
 
இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட  நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள்  தங்கள்  காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …
 
நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..

« Newer Posts - பழைய பதிவுகள் »