(முகப்பு அட்டை)
தலைப்பு: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல்
விபத்து என்பார்களே… அது இதுதானோ? … அதுவும் விபத்தின் முடிவு இன்பமானதாக இருந்துவிட்டால்? … அதுதான் நம் நாயகனுக்கு நேர்ந்தது… குடந்தை ஜோதிடர் வீட்டில் அவன் கண்டது என்ன? சோதிடரையா? வானதியையா? இல்லவே இல்லை … குந்தவையின் பொன்முகம் ஒன்றைத்தான் … ஆயிரம் காவியங்கள் புகழ்ந்து பாட ஒண்ணாத அவள் அழகிய திருமுக மண்டலத்தைத்தான் … அதுவரை அவனுக்குள் இருந்த இதயம் வெளியேறி, அவன் எதிரில், வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேரப்பொலிந்த குந்தவையின்பால் சென்று கலந்தது…
அவள் இளவரசியோ அல்லது சாதாரணபெண்ணோ, அந்த நொடியில் அவனுக்கு அது எதுவுமே தோன்றவில்லை … அங்கே , அந்த வேளையில் அவன் இளவரசியை சந்திப்பதை எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை …. எத்தனையோ போர்க்களங்களில், அவன் எதிரிகளின் கூரிய உலோக வாட்கள் சாதிக்க முடியாததை, இப்பெண்ணின் கண்களாகிய வாள்கள் சாதித்து விட்டனவே !!! அவனை அடியோடு சாய்த்து விட்டனவே !!! இதுதான் இயற்கையின் இணையில்லா வலிமையோ… இதுதான் இன்ப விபத்து என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விபத்தில் சிக்கிக்கொள்ளலாமே … என்று எண்ணுகிறான் நம் நாயகன்.
ஆனால், அவள் இளவரசி என்று தெரிந்ததும், குந்தவைக்கு வந்த அதே தயக்கம், இன்னும் அதிகமாகவே அவனுக்குள் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது … தன் நிலை என்ன? அவள் நிலை என்ன? அரசர்கள் எல்லாம் அடிபணிந்து சேவகம் செய்யக்கூடிய “அரசிளங்குமரி” எங்கே? அனாதையாய் பழங்குடியின் பெருமையை மட்டும் தாங்கியிருக்கும் தான் எங்கே? தனக்கென்று ஒரு நாடில்லை… ஏன்? சொந்தமாய் வீடு கூட இல்லை… இது பொருந்துமா? நடக்குமா? உலகம் தான் ஏற்குமா? என்று அவனும் பலவாறு சிந்திக்கிறான் … ஒரு பெண்ணின் கண்களுக்கு உள்ள சக்தியை எண்ணி எண்ணி வியக்கிறான்…. மனப்போராட்டங்களில் தன் அமைதியை இழக்கிறான் … ஆனாலும் அதில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து அதில் திளைக்கிறான் …
காதல் என்ற ஒன்றை இதுவரையில் அவன் கேள்விப்பட்டுதானிருந்தான்… ஆனால் அதை இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் … ஒவ்வொரு முறையும் அவள் பொன்முகத்தில் தோன்றும் பலவகை பாவங்களில், அவள் தன்னை சிறிதளவேனும் விரும்புகிறாளா? இல்லையா? என்ற கேள்விக்கான விடையை தேட முயல்கிறான் .. ஆனால் அவள் கண்களை பார்த்தபின், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன எதிர்பார்த்து அவள் முன்பு இந்த நிமிடம் நிற்கிறோம் என்பதெல்லாம் அவனுக்கு எங்கே ஞாபகம் இருக்கின்றன? அவன்தான் தன்னையே அவளிடம் தொலைத்து விட்டானே…
அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அவன் அறிவான் .. அவளும் தான் அவளை நேசிப்பதை அறிவாள்… எனவே, பெரிதாக பேசிக்கொள்ள ஒன்றும் இல்லை … ராஜாங்க விஷயங்கள், பாண்டிய நாட்டாரின் சதிச்செயல்கள், பழுவூர் இளையராணியின் பழிவாங்கும் படலம் இவற்றுக்கு நடுவே, காதல் கவிதைகள் புனைந்து மகிழ இருவருக்குமே நேரம் இல்லைதான்…. அதற்கான சமய சந்தர்ப்பங்களும் அமையவில்லைதான் ….
காவலர்களிடம் இருந்து தப்பி வந்து அவசர அவசரமாக ஓலை கொடுக்க வேண்டும், திரும்ப உடனே புறப்பட்டு இலங்கை செல்லவேண்டும், பின் திருடன் போல் பதுங்கிப்பதுங்கி மாறுவேடம் பூண்டு அவளை மீண்டும் வந்து சந்திக்க வேண்டும் .. அடடா .. எத்தனை இம்சைகள் .. இதற்கு நடுவே காதல் கீதம் பாட எப்படி மனமிருக்கும்?
இத்தகைய நெருக்கடிகளிலும் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கையும், அன்பும் வலுவடைந்ததே தவிர நலிவடையவில்லை … சேர்ந்து இருக்கும் சமயங்களில், அவர்கள் தங்கள் காதலைப்பற்றி பேசியதைவிட, சோழ நாட்டைப்பற்றி கவலைப்பபட்டதுதான் அதிகம்…. ஆனாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலின் மேன்மையை அறிவார்கள்… அதை வர்ணனைகள், வார்த்தைகள் எனும் மொழியின் சிறைகளுக்குள் அடைத்து வைத்து ரசிக்க இருவருமே விரும்பவில்லை !!! …
நாம் கூடத்தான் … சரி தானே?
கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராகவன் சாம்பத் குமார் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க…
தொடரும்…..
ஏழு வருடங்கள் கடந்து விட்டன.. இருப்பினும், என் மனம் எனும் கர்ப்பப்பையில் இறக்கி வைக்க முடியாதக் கருவாக ஒரு காவியம் நிலைத்திருக்கிறதென்றால் அது ‘பொன்னியின் செல்வன்’தான். ஒரு தாய் எப்படி தன் குழந்தையின் குறும்புத் தனங்களை பிறரிடம் கூறி மகிழ்வாளோ அதுபோல, கல்கி எனும் எழுத்தாளன் பெற்றெடுத்த குழந்தையை இன்று வாசகர்கள் தஙகளது மடியின் மீது தவழவிட்டு, அது புரியும் லீலைகளை மற்றவர்களிடம் உவகையோடு பகிர்ந்துக் கொண்டு வருகிறோம்.
இடைநிலை பள்ளி பருவத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என் கைகளில் ‘என் செல்வன்’ஆக பாசத்தோடு உறவாடிய காலம் ஒரு மறக்க முடியாத காலம். பொன்னியின் செல்வனை வாங்கிய பிறகு, காலம், நேரம், பசி, தூக்கம் என மறக்கடிக்கப்பட்டு கதையோடு ஐக்கியமாய் இருந்ததை மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் காலையில் பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்தால் மாலையில் என் தாயார் வேலை முடிந்து திரும்பும் வரை புத்தகம் கையுமாகத்தான் இருப்பேன். அவர் வந்த பிறகுதான் எனக்கு உணவு. உணவருந்திய பிறகு இரவு நடுநிசிவரை புத்தகத்தின்மீதே கண்கள் பாய்ந்திருக்கும். இப்படியே மூன்று நாட்களை ஓட்டி ‘பொன்னியின் செல்வனை’ படித்து முடித்தேன்.
அதோடு நின்றுவிடாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் பொன்னியின் செல்வனை எடுத்துப் படிப்பேன். இதுவரை 5 முறைகள் பொன்னியின் செல்வனை படித்து விட்டேன். ஒவ்வொரு தடவையும் புதிய புதிய விஷயங்களோடு நம்மை எதிர் நின்றழைக்கும் காவியம் ‘பொன்னியின் செல்வன்’.
என்னுடைய அந்த இனிமையான அனுபவங்களை என்னுள் மீள்கொணர்வதற்குக் காரணமாய் அமைந்த நண்பர் திரு.விக்னேஷ்வரன் ஐயா அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ தொடரை எழுதி வாருங்கள், வாழ்த்துகள்.
நன்றி
நன்றி சத்தீஸ் குமார்… உங்க அனுபவத்தை வைத்தே ஒரு இன்னொரு பொன்னியின் செல்வனை உருவாக்கிடலாம் போல…
என்னுடைய தினசரி இரயில் பயணத்தில் தான் நான் பொன்னியின் செல்வன் நாவலை அதிகம் படித்தேன்.
சில நாட்கள் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி இரயில் சென்றது கூட தெரியாமல் படித்திருக்கிறேன்.
//என்னுடைய தினசரி இரயில் பயணத்தில் தான் நான் பொன்னியின் செல்வன் நாவலை அதிகம் படித்தேன்.
சில நாட்கள் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி இரயில் சென்றது கூட தெரியாமல் படித்திருக்கிறேன்.//
ஹ ஹ ஹ… நன்றி வெங்கட்ராமன்.
//யாருடைய காதல் உயர்ந்தது ?//
நான் நந்தினி மீது வைத்த காதல்….B-)
“என்னுடைய தினசரி இரயில் பயணத்தில் தான் நான் பொன்னியின் செல்வன் நாவலை அதிகம் படித்தேன்.”
naan enathu bas payanathil………
//நான் நந்தினி மீது வைத்த காதல்….B-)//
அஹா… அவனா நீ…
பலமுறை வாசித்திருக்கின்றேன் ஏனோ அருள்மொழிவர்மர் வானதி காதல் காட்சிகளைவிட வந்தியத்தேவன் குந்தவை காதல்காட்சிகள் மனதில் நிற்கின்றன. அதேபோல் சேந்தன் அமுதனினதும் பூங்குழலியினதும் காதலும் சுவையானது.
வாங் வந்திய தேவன்… நான் உங்க பெரிய விசிரி… தொடர்ந்து படிங்க
[…] மாலைpSat, 26 Apr 2008 15:33:59 +000033சனிக்கிழமை, 15 2008 ஆல் விக்னேஷ்வரன் அடைக்கலம் முதல் பாகம் இங்கே சுட்டவும் […]
யோவ் விக்கி,
அது என்னய்யா படத்துக்கு கீழ வந்தியத்தேவன் வல்லவரையன். அவரு என்ன mnc லயா வேலை பாக்குறாரு, இப்படி பேர மாத்திப் போடறதுக்கு.
மன்னிச்சுகோங்க அண்ணாதே…
தங் சிலிப் ஆகி பூடுச்சு….
பொன்னியின் செல்வன். என் வாழ்வின் காதல் பக்கங்களில் அடிக்கடி இடம்பெற்ற பெயர். சொல்லப் போனால் என் காதலுக்குத் தூது போனதே பொன்னியின் செல்வன்தான்.
அவளிடம் பல விஷயங்கள் பிடித்திருந்தது. அவளது மனிதாபிமானம் பிடித்திருந்தது, அவள் அழகில் இழைந்த அப்பாவித்தனம் பிடித்திருந்தது, அவள் தோற்றத்தில் இருந்த எளிமை பிடித்திருந்தது, என்னைப் போலவே புத்தக வாசிப்பில் அவளுக்கு இருந்த ஆர்வம் பிடித்திருந்தது, எல்லாவற்றுக்கும் மேலாய் அவளும் என்னைப் போல் கல்கியின் ரசிகை.
என் மனதில் அவள்தான் குந்தவை, நான்தான் வந்தியத்தேவன். ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். என் உள்ளத்தை திறந்து காட்டிவிட வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவள் வேறிடத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள்.
என் காதலை அவளுக்குத் தெரியப்படுத்தியும், நேரடியாக இன்றுவரை அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒவ்வொரு இரவும் என் தலையணைக்குப் பக்கத்தில் என்னோடு சேர்த்து அவள் வாசித்துத் திருப்பித் தந்த பொன்னியின் செல்வனின் ஐந்து புத்தகங்களும் உறங்குகின்றன. வருகின்ற உறக்கம் கண்களுக்கு மட்டுமே, இதயம் போல், நினைவுகளும் ஓய்வதில்லை!!!
இன்னமும் தேடி கண்டு பிடிக்கவில்லையா உங்கள் காதலியை???
கண்தமாறன் தங்கை காதல் தான் உயர்வானது
//கண்தமாறன் தங்கை காதல் தான் உயர்வானது
//
பலருக்கும் பிடித்தது இந்த காதல் தான்.. அது கதையின் முடிவின் தாக்கமாக இருக்கலாம்…
என்ன காரணமோ, அவள் என்னைத் தவிர்க்க விரும்புகிறாள். அதனால் தான் மனதுக்குப் பிடித்த சென்னையை விட்டு ஹைதராபாதுக்கு வந்தேன். இந்த மூண்று ஆண்டுகளில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்! அதைத் தெரிந்துகொள்ளவோ, தாங்கிக்கொள்ளவோ வலுவில்லாத காரணத்தால் அவளை மீண்டும் சந்தித்துவிடக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறேன்.
காதலில் ஏது உயர்ந்தது தாழ்ந்தது? என்னளவில் மணிமேகலையின் (கந்தமாறனின் தங்கை) காதல்தான் நினைவில் நிற்பது. இதற்கு என் சொந்த அனுபவம் கூட காரணமாக இருக்கலாம்.
முதல் மரியாதை படத்தில் பூங்காற்று திரும்புமா என்ற பாடலில் ஒரு வரி உண்டு, “சுக ராகம் சோகம் தானே” என்று. சோகமும் சுகம்தான் என்ற எண்ணம் இல்லாதவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும், சொல்லுங்கள். நம்மில் பலருக்கு தற்போதைய வாழ்க்கை சுகமானதாக இருந்தாலும், இழந்துவிட்ட குழந்தைப் பருவத்திற்குதானே மனது ஏங்கிக்கொண்டிருக்கிறது.
உண்மை தான் நண்பரே… கனத்த இதையத்தோடு எழுதியதை போல் உள்ளது. உங்கள் காதல் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.
vijaygopalswami
உங்கள் காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள். காதலில் பிரச்சனை வருவது சகஜம்
நன்றி ஜெய்ஷங்கர். இப்போது என்னுடைய எண்ணமெல்லாம் என்னோடு தொடர்புடைய எவரும் காயப்படாமல் என்னுடைய காதல் காலங்களை ஒரு நாவலாக எழுதவேண்டும் என்பதுதான்.
என்னுடைய இரண்டு பின்னூட்டங்களையும் படித்தவர்கள் முடிந்தால் நான் எழுதவிருக்கும் நாவலுக்கு ஒரு தலைப்பைத் தேர்வுசெய்து தாருங்கள். அது பொன்னியின் செல்வனுக்குத் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் நாயகனுக்கும் நாயகிக்கும் பெயர் சூட்டுகிற பொறுப்பைக் கூட உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
பெயர்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
// காதலில் பிரச்சனை வருவது சகஜம்//
சொல்வது சுலபம் தான்.. அவனவனுக்கு வழி வந்தாதானே தெரியும்… முதலில் காதலில் பிரச்சனை. பிறகு காதலே பிரச்சனை… பின்பு கல்யாணம் பிரச்சனையோ பிரச்சனை…
//
சரித்திர நாவலா? தற்கால நாவலா?
//
தற்கால நாவல் தான்.
//
சொல்வது சுலபம் தான்.. அவனவனுக்கு வழி வந்தாதானே தெரியும்… முதலில் காதலில் பிரச்சனை. பிறகு காதலே பிரச்சனை… பின்பு கல்யாணம் பிரச்சனையோ பிரச்சனை…
//
அடுத்தவன வாருரது தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே!!!
//தற்கால நாவல் தான்.//
சரித்திரத்தையும் இணைத்து எழுதுங்களேன்… நாயகன்- அருள்மொழி, நாயகி- பூங்குலழி..
எப்படி ஓகேவா??
wrong combination ஆ இருக்கே!!!
அண்ணா விக்னேஷ்வரன் அடைக்கலம்,
சேந்தன் அமுதன் அருள்மொழியின் சித்தப்பா,
பொன்னியின் செல்வனை இன்னோருமுறை படியுங்கள்.
பூங்குழலி காதலிப்பது சக்கரவர்த்தி அரியனையை. அருள்மொழியை அல்ல
//சேந்தன் அமுதன் அருள்மொழியின் சித்தப்பா,
பொன்னியின் செல்வனை இன்னோருமுறை படியுங்கள்.//
தலைவா… தெரியும்… எனக்கு அந்த இரு பெயரும் பிடித்திருந்தது… அதனால் தான் சொன்னேன்… காம்பினேஷன் தப்புதான்… விஜய் அண்ணாச்சி சரித்திர கதை எழுதல அதனால இந்த பெயர் நல்ல இருக்குமேனு சொன்னேன்… இது சரி வரலனா பரவாயில்லை… நீங்கதான் எதாவது சொல்லுங்களேன்…
//நீங்கதான் எதாவது சொல்லுங்களேன்//
கருணாகரன் காஞ்சனா(கடல் புறா)
கண்ணன் கமலி(சிவகாமின் சபதம்)
இது எப்படி இருக்கு
//இது எப்படி இருக்கு//
சூப்பரா தான் இருக்கு அண்ணாச்சி… உங்கள மாறி யோசிக்க முடியுமா.
//கருணாகரன் காஞ்சனா(கடல் புறா)//
அப்ப மஞ்சளழகி கோச்சிக்க மாட்டாளா?? இல்ல நம்ப விஜய் ரெண்டு பொண்டாட்டிகாரரா???
//மஞ்சளழகி கோச்சிக்க மாட்டாளா//
மாட்டாள். அவ தான் மூன்றாம் பாகத்தில் கருணாகரனை திருமணம் செய்கிறாளே.
//விஜய் ரெண்டு பொண்டாட்டிகாரரா//
அதுக்கு காஞ்சனா permission தரணும்
யோவ் என்னய்யா என்னை வச்சி காமெடி பண்றீங்க 🙂
எனக்கும் ஆசைதான் ரெண்டு பொண்டாட்டி கட்டனும்னு. ஆனா நாலைஞ்சு குடும்பம் என் மேல கூடி கும்மியடிச்சிட்டுப் போகும். தேவையான்னு யோசிக்கிறேன்!!!
யோவ் சபையில பேசியாச்சு, முடிவு உன் கைல… கருணாகரன இல்ல கண்ணன…
ஹீரோ பேரு முடிவாயிருச்சு: அருள் என்கிற அருள்குமரன்
//அருள் என்கிற அருள்குமரன்//
நாட்டாமை பேர மாத்து(கருணாகரன இல்ல கண்ணன).
அப்புறம் உன் காதலி பெயர் என்ன்?
எப்போ நாவல் எழுத போறீங்க
ஜெய்ஷங்கர், பொன்னியின் செல்வனோடு தொடர்புடைய பெயர்களாக கேட்டேன். நீங்கள் சிவகாமியின் சபதத்திலிருந்தும், கடல் புறாவிலிருந்தும் சொல்கிறீர்கள். நியாயமா?
ஆகவே, அருள்குமரனில் மாற்றமில்லை. நாயகிக்கும் பெயர் தேர்ந்தெடுத்தாயிற்று. மணிமேகலை.
நாவலுக்கு ஒரு பெயர் கேட்டிருந்தேன். யாரும் அதை கண்டுகொள்ளவே இல்லை.
முதல் அத்தியாயம் எழுதி முடித்தாகிவிட்டது. இம்மாத இறுதியில் ஒரு நீண்ட நெடிய பயணம் இருப்பதால், இன்னும் மூன்று அத்தியாயம் ரிசர்வ் வைத்துக்கொண்டு பதிப்பிக்கலாம் என்று இருக்கிறேன். இன்னும் பத்து நாட்களுக்குள் எழுதிமுடித்துவிடுவேன்.
அதற்குள் நாவலுக்கு ஒரு பெயரைக் கண்டுபிடியுங்கள்.
//நீங்கள் சிவகாமியின் சபதத்திலிருந்தும், கடல் புறாவிலிருந்தும் சொல்கிறீர்கள்//
தப்பு தான்.
//அதற்குள் நாவலுக்கு ஒரு பெயரைக் கண்டுபிடியுங்கள்//
விஜயதீபம்–இது சரித்திர நாவலாக இருந்தால்
உங்க்ளுடையது இந்தகால நாவல். அதனால
1.கார் காலக்காதல்(சங்க காலத்தில் நாயகன் பொருளீட்ட சென்று கார் காலத்தில் திரும்பி நாயகியிடம் சேர்வான்)
2.அலைகடல்
3.பத்ம வியூகம்(உள்ள போயாச்சு. வெளியே வர வழி தெரியாது)
4.கண்ணாமூச்சு
அப்புறம் யோசிச்சு நிறைய தலைப்புகள் அனுப்புறேன்
//பத்ம வியூகம்//
இது சூப்பரா இருக்கு…
அப்போ பத்ம வியூகம் நாவலுக்கு பத்ம வியூகம் பெயரை சூட்டலாமா?
விஜய்கோபால்சாமி என்ன சொல்றீங்க.
நன்றி ஜெய்ஷங்கர்
பத்மவியூகத்தை விட எனக்கு அலை கடல் பிடித்திருக்கிறது. அந்த தலைப்பை மேலும் பண்படுத்தித் தாருங்கள்.
விக்னேஷ்,
என்னுடைய கணிணியில் கூகுள் டாக் சரியாக வேலைசெய்வதில்லை. ஜி-டாக் கேட்ஜெட்டும் சரியாக வருடதில்லை. நண்பர் ஒருவரைக் கொண்டு சரி செய்யச் சொல்லியிருக்கிறேன். நாம் வெகு விரைவில் உரையாடலாம்.
இது பூங்குழலியின் பாட்டு
இது தலைப்பு “அலை கடலும் ஒய்ந்திருக்க”
அகக்கடல் தான் பொங்குவதேன்
இந்த தலைப்பு எப்படி இருக்கிறது
இவ்ளோ விஷயம் நடந்திருக்கு தெரியாம இப்பதான்
குந்தவைன்னு ஒரு பதிவை ஆரம்பித்திருக்கின்றேன்.
இருந்தாலும் நானும் ஒரு பொன்னியின் செல்வன் ரசிகைதான்.
(பேய் மாதிரி ராத்திரி முழுக்க உட்கார்ந்து வாசித்து, ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கினத மறக்கவேமுடியாது.)
தொடருங்கள்.