என்னை இங்கே வந்து சந்திக்கவும்.
http://vaazkaipayanam.blogspot.com/
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”, எனக் கேட்டதற்கு,
“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். “மன்னா! அப்படி என்ன சொக்கு பொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே”.
“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத்தனுப்பினேன், அவன் நமக்கு நண்பனாகி விட்டான்”, எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கெட்டு விட்டான்.
அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.
குட்டிக் கதைகள் இல் பதிவிடப்பட்டது | 14 Comments »
உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா இல்லையா???
பரிசோதித்து பாருங்களேன்..
1) தூங்கி எழும் போது உடல் சோர்வு ஏற்படும்
2) அடிக்கடி கழுத்து வலியும், தலையை அசைப்பதற்கு சிரமமும் ஏற்படும்
3) சிறந்த ‘ஷாம்பு’ வைகைகளை பயன்படுத்தி குளித்தாலும் தலை முடி சிக்கு பிடித்து காணப்படும்
4) தலை வழி மற்றும் குடைச்சல் ஏற்படும்
5) உடல் எடை கூடிக் கொண்டே போகும்
6) தீராத உடல் வழி.
7) குறுகிய சிந்தனையில் இருப்பதாக உணர்வீர்கள்
8) தாழ்வு மனப்பான்மை இருக்கும், அடுத்தவர் தன்னை கேலி பேசுவதாக உணர்வீர்கள்
9) மேலிடத்தில் அடிக்கடி திட்டு வாங்கிக் கொள்வீர்கள்
10) மதிய உணவு சமயத்தில் வேர்த்து வடியும்
11) அதீத உடல் தளர்ச்சி
12) நசுக்கப்படுவதை போன்ற மன பிரம்மை
13) விருந்தாளிகளின் வருகை பிடிக்காமல் போகும்
14) காய்ச்சல், சளி வருவதாகவும், தலை பாரமாக இருப்பதாகவும் உணர்வீர்கள்
15) யாரோ உங்களை பின்தொடர்வதை போன்றதொரு பயம்.
நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்?
படங்கள் இல் பதிவிடப்பட்டது | 11 Comments »
உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது உன்
இதயத்தை பார்த்துக்
கொண்டே இருக்க
கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள்
மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட
கண்களை மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
தொலைத்தூர புதுப்புது கிரகங்கள் தேடுகின்றான்
வானத்திலும் கூடுகட்டி குடியேறிட நினைக்கிறான்
தொலைந்துவிட்ட பழைய வாழ்க்கையை திருப்பித்தர
முடிந்திடுமா காலந்தோறும் ஆராய்ச்சிகள் நடத்தியே
ஓடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட காலமொன்று
கண்ணிவைத்து காட்டிற்குள் வேட்டைக்கும் சென்றதுண்டு
தேடித்திரிந்து கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்ற காலமுண்டு
நினைக்கையில் மனத்திரையில் விழியோரம் நனைந்திடவே
பல்லாங்குழி டுக்குபறி குண்டித்தல் கபடியாட்டம்
கண்ணாமூச்சி என்று பல விளையாட்டு கும்மாளம்
தொல்லையிலா இளமழலைப் பருவக்கால குதூகலம்
நீங்கவொனா ஏக்கங்களாய் இனியநல் நினைவுகளில்
காய்ச்சலுக்கு பலியானால் வளர்த்தகோழி குழம்பாகும்
இன்றுபோல அன்றில்லை விதவிதமாய் கேளிக்கை
மேய்ச்சலுக்கு ஆடுகட்டி புல்லறுத்த காலம்போய்
ஓய்ச்சலின்றி உழைக்கின்ற உலகம்மாறி போனதன்றோ!
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »