(முகப்பு அட்டை)
தலைப்பு: கடல் புறா
ஆசிரியர்: சாண்டில்யன்
நயம்: சரித்திர நாவல்
பதிப்பகம்: வானதி
ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று. சரித்திர நாவல்களை சேமித்துக் கொண்டும் வருகிறேன்.
தமிழர்களால் கண்டரியப்பட்ட கடாரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்குள் அதிகமாய் இருந்தது. ஆனால் தற்சமயம் ‘கெடா’ என அழைக்கப்படும் கடாரத்தின் வரலாற்றுக் குறிப்புகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. மலாய்காரர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு நடந்த வரலாற்றுக் குறிப்புகளே அதிகம் காணப்படுகின்றன.
இப்புத்தகத்தை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. ஆரம்பத்தில் தேடிய இடங்களில் 140 ரிங்கிட்டிற்கும் குறையாமல் சொன்னார்கள். அப்படி இப்படியென்று கோலாலம்பூரில் சற்று குறைந்த விலைக்குக் கிடைத்தது. தடித்த அட்டை கொண்ட மூன்று பாகங்கள். புத்தகத்தின் வாசனையே தனிதான்.
ஆடி 18-ம் நாளில் பொன்னியின் செல்வன் தொடங்குவது போல், கடல் புறா ஒரு சித்திரா பௌர்ணமியன்று தொடங்குகிறது. கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள்.
ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.
இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது.
இதன் மமதையில் தன்னை சுற்றியுள்ள நாடுகளின் கடல் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கிறான் கலிங்கத்து மன்னன். முக்கியமாக கடலோடிகளாக சிறந்து விளங்கிய தமிழர்களின் ஆதிகத்தை. கலிங்கத்தில் வசிக்கும் தமிழர்களையும் தமிழ் வணிகர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறான்.
கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள்.
கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான். இம்முயற்ச்சிக்கு துணையாக உருவாவதே கடல் புறா எனும் கப்பல்.
பொன்னியின் செல்வனைப் போல் கதை சுற்றி வலைத்துக் கொண்டுச் செல்லப்படவில்லை. கதாபத்திரங்களும் குறைவாக இருப்பதால் கதை சரலமாகப் போகிறது. இரண்டாம் பாகத்தில் அளவு கடந்த சிருங்கார ரசமும் வர்ணனைகளும் சற்று எரிச்சலூட்டுகிறது. பாதிக்கு மேல் கதை சூடுபிடித்து ஆர்வமூட்டுகிறது.
இக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்:
கருணாகர பல்லவன்: சோழர் படைத் தலைவன். இளைய பல்லவன் என அழைக்கப்படுகிறான். தந்திரசாளியும் புத்திசாளியும் கூட. ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மஞ்சளழகியையும் மணம் முடித்து வைக்கிறார். (ஒரே கல்லில் மூன்று மாங்காய்). வண்டை மாநில அரசானான பிறகு தொண்டைமான் என அழைக்கப்படுகிறான்.
காஞ்சனா தேவி: கட்டழகி காஞ்சனா கடாரத்தின் இளவரசி. இவளின் துணிச்சல் கருணாகரனுக்கு இவள் மீது காதல் கொள்ளச் செய்கிறது.
மஞ்சலழகி: ஸ்ரீவிஜய பேரரசின் இளவரசி. ஆக்ஷய முனையின் தலைவி.
அநாபய சோழர்: பிற்காலத்தில் குழோதுங்கன் என பெயர் பெற்று விளங்குகிறார். கருணாகரனின் நண்பன்.
அகூதா: சீனக் கடல் கொள்ளைக்காரன். கருணாகரன் மற்றும் அமீர் என பலருக்கு பயிற்சியளிக்கிறார். பிற்காலத்தில் சீன தேசத்து அரசனாக திகந்தவர்.
அமீர்: இரக்க மனம் கொண்ட அரபு நாட்டு முரடன். கருணாகரனின் உப தலைவனாக பணியாற்றுகிறான்.
கண்டியதேவன்: கருணாகரனின் உபதலைவன். கப்பல் விடுவதில் திறமைசாளி.
அமுதன்: வணிகன். செல்வத்தை பாதுகாப்பதில் சிறந்தவன்.
அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம்.
கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும்.
ஸ்ரீவிஜய வெற்றியோடு கதை நிறைவை அடைகிறது. அதற்கடுதாற்போல் கலிங்கத்தின் படையெடுப்பு போன்றவை வேறு நாவல்களில் உள்ளனவா என தெரியவில்லை. இருந்தால் தெரிவிக்கவும். தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களின் கண்டிருப்போம். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.
//கதையின் நாயகன் கருணாகர தொண்டைமான். அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியேன இரு காதலிகள். ////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவனவனுக்கு ஒன்னுத்துக்கே வழியக்காணோம்!! :-(((
நான் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று!!
நன்றாக ஆசைஅயை இன்னும் கிளப்பி விட்டுவிட்டீர்கள்!! 🙂
வாழ்த்துக்கள்..
[…] கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைக்களும் சுவை கூட்டியுள்ளன. கதையை படிப்பதற்குத் திகட்டாமல் இருக்கச் செய்கிறது. பெண்களை வர்ணனை செய்வதில் சாண்டில்யனை அடித்துக் கொள்ள முடியாது போலும்………….. […]
///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவனவனுக்கு ஒன்னுத்துக்கே வழியக்காணோம்!! :-(((
நான் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று!!
நன்றாக ஆசைஅயை இன்னும் கிளப்பி விட்டுவிட்டீர்கள்!!
வாழ்த்துக்கள்..///
ஹா ஹா ஹா… என்ன சார் இதுக்கு போய் மனசு உடைந்து போகலாமா??? இளைய பல்லவன் அக்காலத்து கமலஹாசன் போலும். நாமும் அவர் வழியை பின்பற்றலாம். எப்படி ஓகேவா???
பொன்னியின் செல்வன் போல் இல்லா விட்டாலும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்ககூடிய தமிழின் சிறந்த நாவல்.
பொன்னியின் செல்வன் போல் கடல்புறா இணையத்தில் கிடைக்கிறதா? யாராவது மீண்டும் படிக்க உதவுங்கள் ….
//பொன்னியின் செல்வன் போல் இல்லா விட்டாலும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்ககூடிய தமிழின் சிறந்த நாவல்.
பொன்னியின் செல்வன் போல் கடல்புறா இணையத்தில் கிடைக்கிறதா? யாராவது மீண்டும் படிக்க உதவுங்கள் ….//
வாங்க தமிழ் பிரியன், கருத்திற்கு நன்றி, கடல் புறா போன்ற புத்தகங்கள் இணையத்தில் கிடைக்க வழியில்லையென்றே நினைக்கிறேன்.
கல்லூரி காலத்தில் படித்தது. ம்…ம்…. அப்பல்லாம் நேரம் வரலாற்று நாவல் போல பெருசாஆஆஆஆ இருந்துது. இப்போ ஹைக்கூ மாதிரி குறுகிப் போச்சு… ம்ம்ம் 😦
//கல்லூரி காலத்தில் படித்தது. ம்…ம்…. அப்பல்லாம் நேரம் வரலாற்று நாவல் போல பெருசாஆஆஆஆ இருந்துது. இப்போ ஹைக்கூ மாதிரி குறுகிப் போச்சு… ம்ம்ம் ///
வாங்க சேவியர் சார்… நீங்க வெட்பிரஸ் கட்சியாச்சே… கருத்திற்கு நன்றி..
Aarvam adhigamaagirathu… ungal padhivai padikkum podhu….
Karunakarn hero vaa, illai Veera Rajendra Chozhan hero vaa?
Ethuvaaga irundhaalum… migavum pesappatta novel idhu… inaiyathalathil kidaitthaal, migavum magizhchi… ethum vazhiyundaa?
Raghavan
Adelaide, Australia
வாங்க ராகவன்…
கருணாகர பல்லவர்தான் கதையின் நாயகன். இணையத்தில் கிடைக்க வழியில்லையென நினைக்கிறேன். அதன் காப்புரிமை வானதி பதிப்பகத்தினரிடம் உள்ளது.
அடுத்தபடியாக கடல் புறா படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.
//அடுத்தபடியாக கடல் புறா படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.//
நன்றி வெங்கட்ராமன். சரித்திர பிரியர்கள் படிக்க வேண்டிய நாவல். சுவைத்து தான் பாருங்களேன்.
கடல் புறா இணையத்தில் இருந்து பிறகு காணாமல் போய் விட்டது என்று கேள்விப்பட்டேன். உண்மையா? கடல் புறாவின் ஒரு பாகம் torrent மூலம் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பலரும் இந்த நாவலை வாசிக்க ஆசைப்படுவதால் இணையத்துக்கு விரைவில் வரும் என்றே தெரிகிறது.
//கடல் புறா இணையத்தில் இருந்து பிறகு காணாமல் போய் விட்டது என்று கேள்விப்பட்டேன். உண்மையா? கடல் புறாவின் ஒரு பாகம் torrent மூலம் பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பலரும் இந்த நாவலை வாசிக்க ஆசைப்படுவதால் இணையத்துக்கு விரைவில் வரும் என்றே தெரிகிறது//
தெரியவில்லை நண்பரே… இணையத்தில் கிடைத்தால் நல்லது தான். பலரையும் போய்ச் சேரும்.
During the last Chennai Book fair, I got this novel. Very interesting to read.
//”அகூதாவின் கதாபாத்திரம் ஆர்வமூட்டும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு மேல் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. அக்ஷய முனையின் தலைவனாக இருக்கும் பலவர்மனின் கதியும் அப்படியே. கல்கியை போல், இக்கதையின் ஆசிரியர் அவர்களின் சில தகவல்களை கொடுத்து கதையை முடித்திருக்கலாம். “//. I too had the same thought after reading it.
I remember, in the first volume, the author tells that in future Karunakaran burns the kilanga kingdom, but no such incident comes in the latter volume.
But still a good novel to read.
// I too had the same thought after reading it.
I remember, in the first volume, the author tells that in future Karunakaran burns the kilanga kingdom, but no such incident comes in the latter volume.
But still a good novel to read.//
உண்மை தான், சரித்திர நாவல்களில் இம்மாதிரியான ஓட்டை உரசல்கள் உள்ளன.
//அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்ததால் ஏற்பட்ட தாக்கம் தொடர்ந்து சரித்திர நாவல்களை படிக்கத் தூண்டிற்று.//
எனக்கும்
//அவருக்கு காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகியென இரு காதலிகள். //
இங்கே ஒன்னுக்கே வழி இல்லை
//இங்கே ஒன்னுக்கே வழி இல்லை//
onnukku illai bt redukku vali irukku
//// I too had the same thought after reading it.
I remember, in the first volume, the author tells that in future Karunakaran burns the kilanga kingdom, but no such incident comes in the latter volume.
But still a good novel to read.//
>>>உண்மை தான், சரித்திர நாவல்களில் இம்மாதிரியான ஓட்டை உரசல்கள் உள்ளன.
கருணாகர தொண்டைமான் கதை நடந்த காலத்திற்கு பின், கலிங்கத்தின் மீது படையெடுத்தது வரலாற்று உண்மை தான். கலிங்கத்து பரணியின் நாயகன் நம்மாள் தான். கடல் புறாவின் முன்னுரையில், சாண்டில்யன் தெளிவாக சொல்லியிருப்பார் – இந்த புத்தகம் deals with the adventures of karunagara thoNdaimaan in his youth என்று.
முதல் பாகத்தின் ஆரம்பத்தில், பிறகாலத்தில் கலிங்கத்தில் சோழ படைகள் பண்ணிய ஹ்யுமன் ரைட் வயலேஷனுக்கு காரணம் கலிங்கத்தின் கொழுப்பு என்று பல முறை சொல்லப்பட்டிருக்கும்
கருத்துக்களுக்கு நன்றி பாலா… மீண்டும் வருக…
கலிங்கத்துபரணி படித்துப்பாருங்கள். யுத்தம் பற்றி தெரியவரும்.
என் கனவு எல்லாம் னான் வந்தியத்தேவன் என்பது தான்
//என் கனவு எல்லாம் னான் வந்தியத்தேவன் என்பது தான்//
புரியவில்லை சங்கர்… கொஞ்சம் விளக்கமாக கூறவும்.
என் கனவில் நான் வந்தியத்தேவனாக வருவேன். எனக்கு பிடித்த நாவல் பொன்னியின் செல்வன் மட்டுமே.
சாண்டில்யனிடம் வர்ணனை இருக்கும் அளவுக்கு கதை போதது
‘கடல்புறா’ நாவலில் பல சறுக்கல்கள் உள்ளன.
கற்பனையும் மிக அதிகம்.
ஓர் உதாரணம்.
அகூதாவைப் பாலூரில் இளையபல்லவன் சந்திக்கும்போது தன்னுடைய
வரலாற்றைக் கூறுவான். அகூதா தன்னை அரசவம்சத்தின என்று சொல்லிக்கொள்வான். இது முதல் பகுதியில். இரண்டாம் பகுதியின் இறுதியில் பலவர்மனிடம் தன்னுடைய கதையைச் சொல்லும்போது தன்னை ஓர் ஏழை மீனவனாகச் சொல்லிக்கொள்வான். அவனுடைய தங்கையை ஸ்ரீவிஜய மன்னனாகிய ஜெயவர்மனுக்காக பலவர்மன் கடத்திச்சென்றுவிட்டதாகச் சொல்வான். தன்னுடைய நிம்மதியான வாழ்க்கையே மாறிவிட்டதாகச் சொல்வான். தங்கையின் மகள்தான் மஞ்சளழகி.
பெயர்களும்கூட பிறழ்ந்து இருக்கும். புக்கிட் பாரிஸான் மலை என்பது
‘பக்கிட்பாரிபொன்மலை’ என்று நூலில் காணப்படும். பாத்தாக் ஜாதியை பதக்குகள் என்று சொல்லியிருப்பார்.
இந்த விஷயங்களை சாண்டில்யனிடம் நேரில் சொல்லியிருக்கிறேன்.
சாண்டில்யனின் சிறந்த கதை என்று இதைச் சொல்வார்கள்.
எனக்குப் பிடித்தது ‘கன்னி மாடம்’. அதைப் படித்துப்பாருங்கள்.
உங்களுக்குப் புத்தகம் கிடைக்கவில்லையென்றால் என்னுடைய நூல்களை
·போட்டொஸ்ட்டேட் செய்துகொள்ளலாம். சுங்கைப்பட்டாணிக்கு வந்தால்
பார்க்கலாம்.